பேசி முடித்த அடுத்த நிமிடம் சிம் கார்டை மாற்றி புது சிம்மிலிருந்து , மறுபடியும் போலீசுக்கு பேசுகிறான் . காவல் நிலையத்தில் பாம் வைத்திருக்கும் இடத்தை அவனே சொல்கிறான். போலீசின் ஒவ்வொறு நடவடிக்கையும் நேரடி ஒளிபரப்பு (தொலைக்காட்சி நிருபணருக்கு சொன்னது இதற்க்கு தான்)செய்தி மூலம் தெரிந்து கொள்கிறான்.
மேலும் 5 இடங்களில் குண்டு வைத்திருப்பதாகவும் அதன் இடங்களைச்சொல்ல வேண்டுமென்றால் சிறையில் இருக்கும் 4 தீவிரவாதிகளை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறான்.
காவல் துறை பல்வேறு நடவடிக்கை எடுத்தும் அவன் பேசும் இடத்தைக்கூட கண்டு பிடிக்க முடியாமல் காவல் துறை தடுமாறுகிறது.அதனால் வேறு வழியில்லாமல் அவனின் கோரிக்கையை நிறைவேற்றுகிறது.
தீவிரவாதிகளை விடுவித்தவுடன் , அவர்களை அவன் சொன்ன இடத்தில் விட்டுவிட்டு போலீஸ் திரும்புகிறது. ஆனால் அந்த தீவிரவாதிகள் நிற்க்கும் இடத்தில் குண்டு வெடித்து அவர்கள் இறக்கின்றனர்..
அதன்பின் ,; ”நான் ஒரு சாதாரண குடிமகன் ,இந்த தீவிரவாதிகள் மும்பையில் குண்டு வைத்தவர்கள் ,எங்களின் இயல்பான நிம்மதியான வாழ்வை கெடுத்தவர்கள் “ என்கிறான். தான் குண்டு வைத்த மற்ற இடத்தைப்பற்றி சொல்கிறான்.”ஒவ்வொறு மனைவியும் கணவனுக்கு அடிக்கடி தொலைபேசியில் அழைத்து பேசுவது , அவன் உயிரோடு இருக்கிறானா என்று அறியத்தான் என்று நினைக்கும் போது கஷ்டமாகத்தான் இருக்கும் , ஆனால் இன்று மும்பையில் வாழ்க்கையில் அது தான் ந்டந்து வருகிறது . அதனால் தான் அந்த தீவிரவாதிகளை கொன்றேன்”என்கிறான்.
இதில் கவனிக்கப்பட வேண்டியது , தீவிரவாதிகளை முஸ்ஸீம்களாக காட்டியதாக இருந்தாலும் , அவர்களின் உணர்வுகள் புண்படும்படாதபடி அழகாக படம் எடுக்கப்பட்டிறுக்கிறது.
இன்னொறு சிறப்பு அம்சம் என்னவெனில் ,கதையின் நாயகனின் பெயரை எங்கேயும் தெரியப்படித்தாதது. அதனால் அவனின் மதத்தையும் கண்டுபிக்கமுடியாதபடி அமைத்திருகிறார்கள்.
சிறுசிறு குறைகள் இருந்தாலும் அருமையான எடிட்டிங்கில் அதன் குறைகள் மறைக்கப்பட்டிருகிறது.