07 February 2008

NHM WRITER- தமிழில் எழுத


இருவாரங்களுக்கு முன்பு ஒரு தொலைபேசி. பதிவுலக நண்பர் ஒருவர் அழைத்திருந்தார். ”New Horizon Media நிறுவனம் ஒரு புதிய தமிழ் சாப்ட்வேர் உருவாக்கியிருக்காங்க. Demo காட்டப் போறாங்க. வர்றியா?” என்று ‘சாட்டர்டே டிஸ்கோதேவுக்கு வர்றியா?' பாணியில் கேட்டிருந்தார். நான் பயன்படுத்தும் தமிழ் மென்பொருள் எனக்கு திருப்திகரமாக இருந்தபோதிலும் புதியதாக என்னதான் செய்திருப்பார்கள் என்று Demoவுக்கு கிளம்பினேன். உண்மையிலேயே அசத்தியிருக்கிறார்கள். இருவாரங்களாக NHM Writer மூலமாகத் தான் தமிழில் தட்டச்சிடுகிறேன். சுலபமாகவே இருக்கிறது. தங்கிலீஷில் தட்டச்சினால் கூட மற்ற சாப்ட்வேர்களுக்கும், பாண்டுகளுக்கும் மிக சுலபமாக கன்வெர்ட்டு செய்யமுடிகிறது. * மொத்த மென்பொருளுமே 850 KBக்குள் இருப்பதால் தடாலடியாக டவுன்லோடு ஆகிறது. ஓரிரு நொடிகளில் கணினியில் நிறுவப்படுகிறது. * வேகம், வேகம், அதிரடி வேகம் - இதுவே இந்த மென்பொருளின் சிறப்பம்சம். ஒரு பெரிய கட்டுரையை பாண்டு கன்வெர்ட்டு செய்ய இனிமேல் தாவூ தீர்ந்துப் போய் உட்காரவேண்டியதில்லை. டவுசர் அவுக்கும் வேகத்தில் NHM Converter மூலமாக பைபிளை கூட கன்வெர்டு செய்யமுடியும். * என்னைப் போன்ற தொழில்நுட்ப அறிவிலிகளுக்கு Regional Language Support போன்ற வார்த்தைகளை கண்டதுமே காண்டு ஆகிவிடும். யாராவது தொழில்நுட்பம் தெரிந்தவரை வரவழைத்து ஒரிஜினல் (?) சிடி கொண்டு Install செய்யவேண்டும். அதுபோன்ற தொல்லைகள் எதுவுமில்லாமல் இந்த மென்பொருளை நிறுவினால் அதுவே இந்த கச்சடா வேலைகளை கவனித்துக் கொள்ளுகிறது. நோகாமல் நோன்பு கும்பிடலாம். * தமிழ்99, தங்கிலீஷு, டைப்ரைட்டிங் தமிழ், பாமினி என்று ஐந்துமுறைகளிலும் மிக சுலபமாக தட்டச்சலாம். அதுமட்டுமில்லாமல் Bamini, Diacritic, Shreelipi, Softview, Tab, Tam, TSCII, Vanavil and Unicode ஆகிய கும்மிகளின் எழுத்துருக்களையும் பயன்படுத்த முடியும் என்பதால் DTP தொழில் மற்றும் பதிப்பகத் தொழிலில் இருப்பவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். * Key Preview வசதி இருப்பதால் செம தூளாக இருக்கிறது. * இது மிக விரைவில் ஓபன் சோர்ஸோ என்னவோ, ஏதோ ஒரு டெக்னிக்கல் டெர்ம் சொன்னார்கள். அந்த முறையில் வெளிவர இருப்பதால் உலகத்தில் இருக்கும் எந்த மொழியையும் மிக சுலபமாக உள்ளீடு செய்து தட்டச்சலாம் என்றார்கள். * இந்தப் புத்தகக் கண்காட்சியில் இந்த மென்பொருள் சிடி வடிவில் (மிகக் குறைந்த விலையில்) உலகத் தமிழர்களை சென்றடையப் போகிறது என்றும் அறிவிக்கப்பட்டது. * எல்லாவற்றையும் விட மிகப்பெரிய விஷயம். இதை இலவசமாகவே பயனாளிகளுக்கு வழங்க இருக்கிறார்கள். New Horizon Media நிறுவனத்தின் பதிப்பக வேலைகளுக்காக துட்டு செலவு செய்து தயார் செய்யப்பட்ட இந்த மென்பொருளை இலவசமாக எல்லோருக்கும் வழங்கும் முடிவு எடுத்த திரு. பத்ரி அவர்களுக்கும், இரவு-பகலாக உழைத்து அட்டகாசமான மென்பொருளை உருவாக்கிய திரு. நாகராஜ் அவர்களுக்கு நன்றி கூற தமிழ்தட்டச்சும் நல்லுலகம் கடமைப்பட்டிருக்கிறது.


இங்கே க்ளிக்கி உபயோகிக்க ஆரம்பிக்கவும்.


06 February 2008

கதையென்றும் சொல்லலாம்

ஒரு வாரம் அலுவலகத்தில் விடுப்பு எடுத்துக்கொண்டு சொந்த ஊரான நெல்லைக்கு சென்றிருந்தேன். போன முதல் நாளே, நண்பர்கள் அனைவரையும் சேர்த்துக்கொண்டு ஊர் சுற்றக் கிளம்பினேன். “தமிழக அரசே! கலைஞர் அரசே! கட்டுப்படுத்து கட்டுப்படுத்து “, குரல் வந்த திசையை நோக்கி திரும்பினேன்.விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மார்க்சிஸ்ட்டுகள் சாலை மறியலில் ஈடுபட்டிருந்தார்கள்.தோழர்கள் மீது என்றுமே எனக்கு மரியாதை இருந்ததால் அங்கேயே நின்று அவர்களை கவனித்துக் கொண்டிருந்தேன்.அவர்களின் கோஷ சப்தம் கூடிக்கொண்டே இருந்தது.அந்த கோஷ்ம் என் கல்லூரி காலத்தை நினைவுப்படுத்தியது.

சில வருடங்களுக்கு முன், கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது ராமேஸ்வரத்திலிருந்து வந்த கிருஷ்ணன் என்ற நண்பனின் அறிமுகம் கிடைத்தது.மிகுந்த முற்ப்போக்கு எண்ணமும் இடதுசாரி சிந்தனையும் உள்ளவன். அவனின் நட்பின் மூலம் என்னிடம் பல மாறுதல்கள் ஏற்ப்பட்டது.அதில் ஒன்று தான் நானும் அவனைப்போலவே கட்சியில் சேர்ந்தது. நான் கட்சியில் இருந்தாலும் தோழர்களின் தவற்றை சுட்டிக்காட்ட தவறியதில்லை.இதனால் எனக்கும் கிருஷ்ணனுக்கும் சண்டை வரும் அளவுக்கு கட்சியின் கொட்டை தாங்கியாகவே மாறியிருந்தான்.

சமூகவிதி சொல்பவர்கள் ஆயுதபூஜை கொண்டாடுவதையும் தீபாவளிக்கு தீக்கதிர் இதழுடன் தீபாவளி மலர் வெளியிடுவதும் வியாபார நோக்கத்துடன் தான் என்றால் , “ சமூகத்தோடு சேர்ந்து தான் புரட்சி செய்யமுடியும் “ என்ற நொட்டை விளக்க்ம் வேறு. அதே தீவாவளி மலரில், நடிகைகளுடைய பேட்டியும்,சில சமயம் பி.ஜே.பியின் விளம்பரமும் அடிமட்ட தொண்டனை குழப்பாமல் இருந்தால் தான் ஆச்சிரியம்.

வேலை கிடைத்து சென்னை வந்துவிட்ட்தால் , கட்சியைப்பறி யோசிக்க்கூட முடியாமல் போய்விட்டது.
காக்கி சட்டைகளின் சப்தம் நினைவுகளை கலைத்தது.சாலை மறியலில் ஈடுபட்டிருந்தோர் காவலர்களைக் கண்டதும் குரல்களை உயர்த்தினர். அவர்களை கைது செய்ய காக்கிகளும் , படமெடுத்து செய்தியாக்க நிருபர்களும் சூழ்ந்தனர்.


”இப்படிவாங்க தோழர், கொடி இந்தாங்க, நீங்க கண்ணாடி போட்டுக்கோங்க தோழர் , தோழர் நீங்களும் வாங்க. அட முடி கலைஞ்சிருக்கு பாருங்க, இந்தாங்க சீப்பு, ம்ம்ம் எல்லாரும் வந்தாச்சாப்பா , இப்ப போட்ட எடுங்க தோழர் “, புகைப்படம் எடுக்கவந்த செய்தியாளரைப் பார்த்து தோழர் ஒருவர் சொன்னது.நிருபர்களை சந்தித்த பின் ,அமைதியாக வண்டியில் அமர்ந்து காவல் நிலையம் சென்று அன்று மாலையே வீடு திருப்பினர்.

இதுவரை நடந்த எல்லா போராட்டங்களும் இப்படித்தான் நடந்திருக்கு , இப்படித்தான் முடிஞ்சிருக்கு “.


04 February 2008

சுதந்திரப் போராட்ட தியாகி வீரவாஞ்சிநாதன்



எழுதப்பட்ட வரலாறு பெரும்பாலும் அரசர்களுடைய வரலாறாகவும் ஆதிக்க சாதித் தலைவர்களின் வரலாறாகவுமே இருக்கிறது. குறிப்பிட்ட சாதியினரை மகிழ்விக்க வரலாற்றில் பல சம்பவங்களை திரித்தும் , பலவற்றை மறைத்துமே நமக்கு கற்றுக்கொடுக்கப்படுகிறது.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியாளராக இருந்த ஆஷ் துரையை வாஞ்சிநாதன் என்பவர் மணியாட்சி ரயில்நிலையத்தில் சுட்டுக்கொன்றார் என்பதுதான் நாம் சிறுவயது முதல் படித்து நமது சுதேச உணர்வுகளை தூண்டிய செய்தி.இதனை படிக்கும் அனைவரும் வாஞ்சியை ஒரு வரலாற்று நாயகனாகவும் சுதந்திரப்போராட்ட தியாகியாகவும் நினைத்து வந்தோம்.
ஆனால் செங்கோட்டையைச் சேர்ந்த பலர் கூறியது , ஆஷ்துரை திருநெல்வேலி ஆட்சியாளராக பொறுப்பேற்றுக் கொண்ட நாள் முதல் அனைத்து சாதியினரையும் சமமாக நடத்தவேண்டும் என்று வலியுறுத்தினார். அவரது அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் அனைவரும் சாதிபாகுபாடு இல்லாமல்
ஒரே இடத்தில் மதிய உணவு உண்ணவேண்டும் என்றும் ஒரே குடத்தில் தண்ணீர் அருந்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

அவர் செய்த மகத்தான சாதனை , குற்றால அருவியில் தெய்வங்களும் , தெய்வத்திற்க்கு அடுத்தபடியான பிராமணர்களுமே குளிக்க முடியும், ஏனைய சாதியைச் சார்ந்த யாரும் குளிக்க கூடாது என்றிருந்த மறபை உடைத்து அனைவரும் குளிக்கலாம் என்று உத்தரவிட்டவர் ஆஷ்.
இதுபோன்ற சமூக சீர்திருத்தங்களை உத்தரவிட்ட்து மட்டுமில்லாது தானே முன்னின்று நட்த்தவும் செய்தார்.அவரின் இந்த செயல்களால் ஆத்திரமடைந்த வாஞ்சிநாதன் “பாரத மாதா சங்கம் “ என்ற பெயரில் பிராமண இளைஞர்களையும் , வெள்ளாளர் இளைஞர்களையும் ( அக்காலத்தில் பிராமணர்களுக்கு தாங்கள் தான் இணையானவர்கள் என்று காட்டிக்கொள்ள அவர்களைப்போலவே நடந்துக்கொண்ட இனம்) சேர்த்துக்கொண்டு ஆஷ் செய்த சீர்திருத்தங்களை எதிர்க்க ஆரம்பித்தனர்.

ஆஷ் தொடர்ந்து சாதியிலான வேறுபாட்டை எதிர்த்து வந்தார். பிரசவ வேதனையால் துடித்துக் கொண்டிருந்த அருந்த்தி சமுதாயத்தைச் சேர்ந்த பெண், பிராமணர்கள் வசிக்கும் தெரு வழியாக மருத்துவமனைக்கு போக வேண்டியதிருந்தது. அவர்களை
பிராமணர்கள் உள்ளே விட மறுத்தனர்.
அப்போது அவ்வழியாக வண்டியில் வந்த ஆஷ்துரையும் அவரது மனைவியும் அந்தப்பெண்னை அவர்கள் வண்டியிலேயே ஏற்றி பிராமணர் தெரு வழியாக சென்று மருத்துவமனையில் சேர்த்தனர்.

அவரின் இந்த செயல்களால் பிராமண குலத்திற்க்கு இழுக்கு நேர்ந்ததாக பாரத மாதா சங்கத்தினர் கருதினர்.அதனால் ஆஷை கொன்றுவிட தீர்மானித்தனர். அதன்படியே வாஞ்சிநாதன் மணியாச்சி ரயில் நிலையத்தில் ஆஷை சுட்டுக்கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டான். அவன் சட்டைப்பையில் இருந்த கடித்தின் மூலம் அந்த சங்க உறுப்பினர்களின் ஆதிக்க சாதி வெறி தெரிகிறது.
வார்த்தை மாறாமல் அக்கடிதம் அப்படியே :

“ ஆங்கில சத்துருக்கன் நமது தேசத்தைப் பிடுங்கிக் கொண்டு ,அழியாத சனாதன தர்மத்தை காலால் மிதித்து துவம்சம் செய்து வருகிறார்கள்.ஒவ்வொரு இந்தியனும் தற்காலத்தில் தேச சத்துருவாகிய ஆங்கிலேயரைத் துரத்தி தர்மத்தையும் சுதந்திரத்தையும் நிலை நாட்ட முயற்சி செய்து வருகிறான்.எங்கள் ராமன்,சிவாஜி,கிருஷ்ணன்,குரு கோவிந்தர்,அர்ஜுன்ன் முதலியோர் இருண்ட்க தேசத்தில் கேவலம் கோமாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனை முடிசூட்ட உத்தேசம் செய்து கொண்டு பெரும் முயற்சி நடந்து வருகிறது.அவன் எங்கள் தேசத்தில் காலை வைத்த உடனையே அவனைக் கொல்லும் பொருட்டு 3000 மதராசிகள் பிரதிக்கினை செய்து கொண்டிருக்கிறோம். அதனைத் தெரிவிக்கும் பொருட்டு அவர்களில் கடையோனாகிய நான் இன்று இச் செய்கை செய்தேன்.இது தான் இந்துஸ்தானத்தில் ஒவ்வொருவனும் செய்ய வேண்டிய கடமை”.

இப்படிக்கு,
R. வாஞ்சி ஜயர்.


நியாயமாப்பார்த்தா தீண்டாமையை எதிர்த்து போராடி அதில் ஒரு சாதிவெறி பிடித்த மனிதனால் உயிர் இழந்த ஆங்கிலேய பிரபுவுக்கு நாம் அஞ்சலிதான் செலுத்த வேண்டும். நான் நெல்லை சென்றிருந்தபோது படமெடுத்து வைத்திருந்த ஆஷின் கல்லறையை இங்கே கொடுத்திருக்கிறேன்.

ஆதாரம்: அருந்ததியர் வாழும் வரலாறு . ஆசிரியர் : மாற்கு.

02 February 2008

யார் சொல்ல யார் எழுதியது

இரண்டு நாட்களாக வீட்டைவிட்டு வெளியே போகமுடியாத அளவுக்கு காய்ச்சலில் படுத்திருந்தேன். இளையராஜாவின் இசையில் செல்பேசி ஒலித்தது.வலையுலகின் மூத்தபதிவர் அழைத்திருந்தார்.பொதுவாக மொக்கை கும்மிகளுக்கு மட்டுமே அழைக்கும் அவர் இன்று எதோ முக்கியமான செய்தி என்று பீடிகையுடனே ஆரம்பித்தார்.கண் பார்வை இழந்தவர்களுக்கு லயோலா கல்லூரியில் தேர்வு நடந்துகொண்டிருப்பதாகவும்,அவர்கள் சொல்ல சொல்ல நாம் எழுத வேண்டும் என்றும், என்னால் அப்படி எழுத முடியுமா என்றும் கேட்டிருந்தார். சரி தல சொன்னதுக்கப்புறம் மறுபேச்சு ஏது என்று அவர் கொடுத்த எண்னை தொடர்பு கொண்டு, திரு. மேத்தியூவிடம் பேசி, நாளை வருவதாக பதிவு செய்துகொண்டேன்.

மறுநாள் என் பரீச்சைக்கு செல்வது போல ஒருவித பதற்றத்தோடனேயே கிளம்பினேன். 12:30 மணி பரிச்சைக்கு 11;45 க்கு வண்டியை தட்டினேன். சுமார் அரைமணி நேரத்தில் லயோலா கல்லூரி. மேத்யூக்கு தொலைபேசியில் அழைத்தால், தான் ஏதோ முக்கியமான வேலையில் இருப்பதாகவும் தேர்வு அறைக்கு சென்றுவிடுமாறும் கேட்டுக்கொண்டார்.சரியென்று தேர்வு அறையை தேடிச் செல்வதற்க்குள் தாவு தீர்துவிட்ட்து. ( எவ்வளவு பெருசா கட்டிருக்கானுங்க).அங்கு சென்று தேர்வு மேற்ப்பார்வையாளரிடம் ஒரு சலாம் போட்டு அறிமுகம் செய்து கொண்டேன்.அவரின் முதல் கேள்வியே அதிர்சியாக்கியது.
தமிழ் தெரியுமா ? , என்றார். இவ்வளவு நேரம் நாம் தமிழில் தான் பேசிக்கொண்டிருந்தோம் என்றேன் (நம்ம பட்டிக்காட்டு பாஷையையும் மூஞ்சியையும் பார்த்து ஆங்கிலம் தெரியுமானு கேட்டிருந்தால் நியாயம்). அவரே விளக்கினார், அங்கு ஒரே சமயத்தில் பல தேர்வுகள் நடந்து கொண்டிருப்பதாகவும், தமிழ் மாணவனுக்கு தேர்வு எழுதுவதாக சொன்னவர் வரவில்லையென்றும், எனக்கு முன் இதே போல் தேர்வு எழுத வந்திருந்த பல பேருக்கு தமிழ் எழுதுவதில் தகராறு என்றார். நானும் சரியென்று எழுத ஆரம்பிக்கும் போது பதிவுசெய்திருந்த நபர் வந்த்தால் வேறுஒரு மாணவனுக்கு ஆங்கில பரீச்சை எழுத ஆரம்பித்தேன்.

தேர்வு எழுத தரப்பட்ட தாளில் “ WRITTEN BY SCRIBE “ என்று அச்சடிக்கப்பட்டிருந்த்து. இதன் மூலம் அந்த விடைத்தாள் கண் பார்வை இழந்தவர்களுக்காக மற்றவர்களால் எழுதப்பட்ட்து என்று திருத்துபவருக்கு தெரிவிக்கின்றனர். இப்படி எழுதப்பட்ட விடைத்தாளில் உள்ள எழுத்துப்பிழைகள் கண்டுகொள்ளப்பட மாட்டாது என்றும் தெரிந்துகொண்டேன்.

நான் தேர்வு எழுத ஒதுக்கப்பட்ட நபர் , தழிழ் துறையை சார்ந்தவர். தமிழில் நல்ல ஆர்வம் உள்ளவர் . ஆனால் அத்துறையில் வேறு ஏதேனும் ஒரு மொழியை முதலாம் ஆண்டு மட்டும் எழுத வேண்டும் போல , அதனால் ஆங்கிலத்தை தேர்வு செய்திருந்தார்.நான் அங்கு சென்றது அவர் சொல்வதை அப்படியே எழுதுவதற்க்கு. ஆனால் அவரால் ஒரு வாக்கியத்தைக்கூட தப்பில்லாமல் ஆங்கிலத்தில் சொல்ல முடியவில்லை. (இதை குறையாக சொல்லவில்லை , நட்ந்தது அப்படியே பதிவு செய்யப்படுகிறது.). வேறு வழியில்லாமல் நானே தேர்வை முழுவதும் எழுதவேண்டியதாகி விட்டது. நல்லவேளை கேள்வி நம்ம தம்மாத்துண்டு அறிவுக்கு எட்டியதால் , எப்படியும் அவர் தேரிடுவார்.
எழுதி முடித்துவிட்டு ஒருவித மனநிறைவோடு கிளம்பும்போது தான் மேத்யூவை சந்தித்தேன் . அவரிடமும் ஒரு வணக்கத்தையும் அறிமுகத்தையும் வைத்துவிட்டு கிளம்பினேன். கல்லூரியில் இருந்து வண்டி நிறுத்தம் வரை நடக்கும் போது , தலைக்கும் ஒரு நன்றியை தெரிவித்து விட்டு(தொலைபேசியில் தான்) வண்டியைக் கிளம்பும் போது தான் காலில் எதோ உறுத்தியது, மூன்று உபயோகப்படுத்தப்பட்ட ஆணுறைகள்.

துப்பட்டா போட்ட பெண்கள் மட்டுமே ஒழுக்கமானவர்கள் என்று நினைக்கும் கற்ப்புக் காவலர்களின் நிர்வாகம் அது. துப்பட்டா போட்ட பெண்கள் மட்டுமே தன் கல்லூரிக்குள் நுழைய அனுமதிக்கும் கல்லூரி, ஆண்மகன்களின் கற்ப்பைக் காக்க ஆணுறையை பரிந்துரைக்கிரார்களோ என்னவோ. வந்தோமா பரீச்சை எழுதினோமா போனோமானு இல்லாம நமக்கெதுக்கு ஊர் வம்பு .