11 November 2008

A WEDNESDAY




கடைக்கு போய் காய்கறி வாங்கிவரும் வழியில் ரொம்ப அசால்ட்டாக ரயில் நிலையம் , காவல் நிலையம் உட்பட ஜந்து இடங்களில் குண்டு வைத்துவிட்டு மனைவியுடன் பேசிக்கொண்டே வருகிறான் நமது கதையின் நாயகன் (வயது சுமார் 50 இருக்கலாம்).நகரத்தின் நடுவில் இருக்கும் ஒரு பாழடைந்த மாடியில்,அவனுக்கு ஒரு குட்டி அலுவலகம் மாதிரி கனிணி, 5,6 செல்போனுடன் தயாராக இருக்கிறது .போலீசுக்கு, பாம் வைத்த தகவலை தெரிவிக்கிறான். அப்படியே தொலைக்காட்சி நிருபருக்கும் அவனே சொல்கிறான்.
பேசி முடித்த அடுத்த நிமிடம் சிம் கார்டை மாற்றி புது சிம்மிலிருந்து , மறுபடியும் போலீசுக்கு பேசுகிறான் . காவல் நிலையத்தில் பாம் வைத்திருக்கும் இடத்தை அவனே சொல்கிறான். போலீசின் ஒவ்வொறு நடவடிக்கையும் நேரடி ஒளிபரப்பு (தொலைக்காட்சி நிருபணருக்கு சொன்னது இதற்க்கு தான்)செய்தி மூலம் தெரிந்து கொள்கிறான்.
மேலும் 5 இடங்களில் குண்டு வைத்திருப்பதாகவும் அதன் இடங்களைச்சொல்ல வேண்டுமென்றால் சிறையில் இருக்கும் 4 தீவிரவாதிகளை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறான்.
காவல் துறை பல்வேறு நடவடிக்கை எடுத்தும் அவன் பேசும் இடத்தைக்கூட கண்டு பிடிக்க முடியாமல் காவல் துறை தடுமாறுகிறது.அதனால் வேறு வழியில்லாமல் அவனின் கோரிக்கையை நிறைவேற்றுகிறது.
தீவிரவாதிகளை விடுவித்தவுடன் , அவர்களை அவன் சொன்ன இடத்தில் விட்டுவிட்டு போலீஸ் திரும்புகிறது. ஆனால் அந்த தீவிரவாதிகள் நிற்க்கும் இடத்தில் குண்டு வெடித்து அவர்கள் இறக்கின்றனர்..
அதன்பின் ,; ”நான் ஒரு சாதாரண குடிமகன் ,இந்த தீவிரவாதிகள் மும்பையில் குண்டு வைத்தவர்கள் ,எங்களின் இயல்பான நிம்மதியான வாழ்வை கெடுத்தவர்கள் “ என்கிறான். தான் குண்டு வைத்த மற்ற இடத்தைப்பற்றி சொல்கிறான்.”ஒவ்வொறு மனைவியும் கணவனுக்கு அடிக்கடி தொலைபேசியில் அழைத்து பேசுவது , அவன் உயிரோடு இருக்கிறானா என்று அறியத்தான் என்று நினைக்கும் போது கஷ்டமாகத்தான் இருக்கும் , ஆனால் இன்று மும்பையில் வாழ்க்கையில் அது தான் ந்டந்து வருகிறது . அதனால் தான் அந்த தீவிரவாதிகளை கொன்றேன்”என்கிறான்.
இதில் கவனிக்கப்பட வேண்டியது , தீவிரவாதிகளை முஸ்ஸீம்களாக காட்டியதாக இருந்தாலும் , அவர்களின் உணர்வுகள் புண்படும்படாதபடி அழகாக படம் எடுக்கப்பட்டிறுக்கிறது.
இன்னொறு சிறப்பு அம்சம் என்னவெனில் ,கதையின் நாயகனின் பெயரை எங்கேயும் தெரியப்படித்தாதது. அதனால் அவனின் மதத்தையும் கண்டுபிக்கமுடியாதபடி அமைத்திருகிறார்கள்.
சிறுசிறு குறைகள் இருந்தாலும் அருமையான எடிட்டிங்கில் அதன் குறைகள் மறைக்கப்பட்டிருகிறது.

07 November 2008

நான் எப்படி?

எனது வேலை : கவிதை எழுதுவது , நாட்டுக்கு உழைப்பது , இமை பொழுதும் சோராதிருப்பது.........பாரதியார்
நீ பாட்டுக்கு பாடிட்டு போய்ட பாரதி........ எனக்கும் ஆசை தான்... திராணி இல்ல பா"...


கவிதை எழுதுவதிலுள்ள கவுரவம்நிலத்தை உழுவதிலும் இருக்கிறது என்பதைஉணர்ந்து கொள்ளாத எந்த சமூகமும் முன்னேற முடியாது" என்று சொன்ன புக்கார் வாஷிங்டன் கருத்தோடு ஒத்துப் போகிற ஆசாமி நான்.
அதன்படியே வாழ்வையும் அமைத்துக்கொள்ள முனைந்து வருகிறேன்.படிப்பது மிகவும் பிடித்த காரியங்களில் ஒன்று. அதை விட பேசுவது மிகவும் பிடிக்கும். எழுத்தை நேசிக்கத் தெரிந்த அளவுக்கு எழுதத்தெரியாதவன் நான்.
ஒவ்வொருவருக்கும் தன் எதிர்காலம் குறித்த கனவுகள் இருக்கும். ஆனால் எனக்கு அப்படி சொல்லிக்கொள்ளும் படி ஏதும் இல்லை. மரணம் என்னை நெருங்கும் வரை எம்மக்களின் சுயத்தினை அவர்களுக்கு அடையாளம் காட்டுவது தவிர.. வேறெந்த ஆசைகளும் கிடையாது.
ஒவ்வொரு மனிதனும் வாழ் நாளில் தான் வாழும் சமூகத்தில், தன்னோடு வாழும் மக்களுக்காக "ஏதாவது" செய்து விட்டுப் போகவேண்டுமென்பது அடியேனின் ஆசை.
------------------------------------------------------------------------


அடுத்த வேளை உணவிற்கு அலையும்
ஏழைகளின் நிலை கண்டு
அவர்கள் வயிற்றில் எரியும் நெருப்பு
உன் இதயத்தில் எரிந்தால்...
நீயும் நானும் ஒன்று!

சதையை நம்பியும் முட்டாள் ரசிகர்களை நம்பியும்
எடுக்கப்படும் படங்களைக் கண்டு
உன்னால் குமுற முடிந்தால்..
நீயும் நானும் ஒன்று!

இந்திய மக்களை மேலும் மேலும் மூடர்களாக்கி
அந்த மூடத்தனத்தையே மூலதனமாக்கி சம்பாதிக்கும்
அரசியல்வாதிகளையும்
அந்நிய நாட்டு நிறுவனங்களையும்
உள்நாட்டு தொலைக்காட்சிகளையும்
விளம்பரங்கங்களையும்
கண்டு உன்னால் கொதிக்க முடிந்தால்
நீயும் நானும் ஒன்று!


வாழ்க்கையில் ஏதேனும் சில சந்தர்ப்பங்களில்
நேர்மைத் தவறி நடக்கும் நிலை வரும்போதெல்லாம்
உன்னால் வேதனைப்பட முடிந்தால்
நீயும் நானும் ஒன்று!


குமுறினாலும் கொதித்தாலும்
கொந்தளித்தாலும் வேதனைப்பட்டாலும்
கையாலாகாத்தனத்தோடு
நீ உன் வழியே நடந்தால்
நீயும் நானும் ஒன்று!