03 August 2008

கேள்வியும் நானே பதிலும் நானே


கேள்வி: எதற்க்காக இந்த தளம்?
பதில்: பல நல்ல பிறமொழி திரைப்படங்களை அறிமுகப்படுத்தவும், அதைப் பற்றி விவாதிக்கவும்,அதன் மூலம் நம் மக்கள் பல்வேறு நாட்டின் கலைத்திறனையும் ,கலாச்சாரத்தையும், வியக்கவும் ரசிக்கவும் முடியும்.அவர்களிடம் சினிமா என்றால் என்ன என்பது விளங்கி அதன் மூலம் தமிழ் சினிமாவின் தற்ப்போதைய போக்கில் மிகப்பெரிய மாற்றம் வரும்.இந்த கள உறுப்பினர்கள் அதை தொடங்கிவைப்பார்கள், சிறுதுளி பெருவெள்ளம் என்பதை நம்புவர்கள் நாங்கள்.

தமிழ்சினிமாவில் என்ன மாற்றம் வேண்டும்?

எங்களுக்கான சினிமா இல்லை இது. அங்கேயெல்லாம் சினிமாவை வாழ்க்கையிலிருந்து எடுக்கிறார்கள், நாம் மட்டும் அது ஏதோ வானத்தில் நடப்பதைப்போல் கதை அமைத்துக்கொண்டிருக்கிறோம்.எங்களுக்கு தெரிந்தவரை இந்தியாவில் மாதச்சம்பளம் வாங்குபவனும்,விவசாயியும் தான் அதிகமாக வாழ்கிறார்கள்.ஆனால் எங்கள் நாயகன் யாரும் விவசாயியாகவோ மாதச்சம்பிளக்காரனாகவோ நடிப்பதில்லை.அப்படியே ஒரு படம் எடுத்தாலும் அதை எற்றுக்கொள்ளமுடியாதபடி மக்களின் மனநிலையை மாற்றிவைத்திருக்கிறார்கள்.அஞ்சு பாட்டும்,சண்டையையும் வைத்துக்கொண்டு சினிமாவை முடித்துவிடலாம் என்பது தான் இங்கே பெரும்பான்மையான கருத்து. நமக்கு பக்கத்து நாடான் ஈழத்திலிருந்து கூட அருமையான படங்கள் வரும் போது நாம் மட்டும் இன்னும் பாட்டையும் சதையையும் மட்டும் நம்பி படம் எடுக்கிறோம்.

சரி , பாட்டே இல்லாமல் தமிழ் சினிமா எடுத்தா , அதை நல்ல சினிமா னு ஏத்துப்பீங்களா?

என்ன கேள்வி இது, வெள்ளிக்கிழமையின் ஒளியும் ஒலியும் கேட்டு தான் எங்களில் பல பேர் தூங்கியிருக்கோம். இளையராஜா இசையமைக்க ஆரம்பித்த பின் எந்த தாயும் தாலாட்டு பாடுவதாக தெரியவில்லை.அதனால் இசையின் முக்கியத்துவமும் மகத்துவமும் எங்களுக்கும் தெரியும். சினிமாவில் பாட்டு என்பது வேண்டுமா வேண்டாமா என்பது உங்கள் இஷ்டம், ஆனால் சினிமாவை சினிமாவா எடுங்க .

எதுக்காக சினிமாவை மாத்தனும்னு சொல்றீங்க?

சினிமா என்பது ஒரு அற்ப்புதமான் ஆயுதம்,நாம் அதை வைத்து முதுகு சொறிந்து கொண்டிருக்கிறோம்.
சனிக்கிழமையின் சினிமாவுக்காக தனது மாச Budjet ல் கொஞ்சம் ஒதுக்கிவைத்து உங்ககிட்டவந்து கொடுக்கிறானே அவனுக்கு பதிலுக்கு ஏதாவது செய்ய வேண்டாமா, அதனால் அவனுக்காகவேனும்,
தமிழ்சினிமாவின் இந்தநிலையிலும் அதை நம்பி வடபழனியிலும் சாலிகிராமத்திலும், சிகரெட்டை மட்டுமே உணவாக கொண்டு, பல வருடம் பசியோடு இருந்தாலும் , தமிழ் சினிமாவில் உலகத்தரத்துக்கு நான் படம் எடுப்பேன் என்று நம்பி ஆயிரம் பேருக்கு மேல் உதவி இயக்குனராய் சுற்றிவருகிறார்கள், அவர்க்காகவேனும்,

தமிழ்சினிமாவின் போக்கு மாறித்தான் ஆகவேண்டும்.

தமிழ்சினிமாவில் நல்ல படமே இல்லை என்கிறீர்களா?

நாங்கள் என்ன தான் பிறமொழி படம் பார்த்தாலும் எங்களுக்கு அங்குலம் அங்குலமாக சினிமாவை ரசிக்க கற்றுக்கொடுத்தது “ உதிரிப்பூக்கள் “ தான். அது ஒரு புத்தகம் போல், எங்களுக்கு தொழில் (சினிமா) சொல்லிக்கொடுத்தது. ”முள்ளும் மலரும்” ,சத்தியமாக தமிழுக்கு இலக்கணம் எழுதியது யாருன்னு தெரியாது ஆனால் தமிழ் சினிமாவுக்கு மகேந்திரன் தான். இது மாதிரி மொத்தமா பார்த்தா ஒரு பத்து படம் தேர்ரதே கஷ்டம். மிச்ச இருக்கிறதெல்லாம் குப்பைங்க.
(குப்பைங்க-கடுமையாக இருந்தாலும் அது நிதர்சனமான உண்மை).ஆம் நண்பர்களே நாம் இது வரை பார்த்தது எல்லாம் படங்களே இல்லை , சினிமாவே இல்லை . மெருகேற்றிய நீலப்படம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.
நல்ல படம் பார்ப்போம்.... நல்ல படம் மட்டுமே பார்ப்போம்...
நல்ல படம் எடுப்போம் .. நல்ல படம் மட்டுமே எடுப்போம்.

No comments: